புயல் பாதித்த மாவட்டங்களில் மீட்பு நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம்.. முதலமைச்சர் உத்தரவு.!

புயல் பாதித்த மாவட்டங்களில் மீட்பு நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம்.. முதலமைச்சர் உத்தரவு.!

Update: 2020-12-05 14:59 GMT

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தடைபட்டுள்ளது. அரசு போர்கால அடிப்படையில் பல்வேறு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.


இருந்தாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மற்றும் திருவாரூர், நாகைப்பட்டினம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் தண்ணீரால் சூழ்ந்து காணப்படுகிறது. 


இந்நிலையில், புயல் பாதித்த மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கை மேற்கொள்வதற்காக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதில், கடலூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத், திருவாரூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள், காமராஜ், கே.பி.அன்பழகன், நாகைப்பட்டினம் மாவட்டத்திற்கு அமைச்சர்கள், வேலுமணி, ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின், சென்னை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் ஜெயகுமார், கே.பாண்டியராஜன் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதபடுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு போர்க்கால நடவடிக்கையை எடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News