நாடு முழுவதும் எதிர்கட்சிகளின் 'பந்த்' பிசுபிசுப்பு: பொய் பேசிய எதிக்கட்சிகள் முகத்தில் கரியை பூசிய விவசாயிகள்.!
நாடு முழுவதும் எதிர்கட்சிகளின் 'பந்த்' பிசுபிசுப்பு: பொய் பேசிய எதிக்கட்சிகள் முகத்தில் கரியை பூசிய விவசாயிகள்.!
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக கூட்டணி தமிழ்நாட்டில் நடத்திய போராட்டங்கள் அரசியல் கட்சி போராட்டங்களாகவே நடைபெற்றது. இந்தியா முழுவதும் 3 மாநிலங்களைதவிர எந்த மாநிலங்களிலும் பந்துக்கு விவசாயிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், நாடு முழுவதும் பந்த் பிசுபிசுத்தது என்றும் செய்திகள் வந்துள்ளன.
இந்த போராட்டங்களில் கட்சி சார்ந்த விவசாய அமைப்புகள் மட்டுமே பங்கேற்றன. மற்றபடி விவசாயிகள் சார்பிலான விவசாய சங்கங்கள் எதுவும் பங்கேற்கவில்லை. இந்த சட்டங்களால் பாதிப்பு எதுவும் இல்லை என்ற மனநிலையில், தமிழ்நாட்டு விவசாயிகள் இருப்பதால், அவர்களிடம் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவில்லை என கூறப்படுகிறது..
பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்களால் அங்குள்ள சிலருக்கு பாதிப்பு இருக்கலாம். என்றாலும் அங்கு எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என்பதாலும், மிக பழமையான மண்டிகள் ஆதரவை முன் வைத்தும் போராட்டம் பெரிதாக உள்ளது.
ஆனால், தமிழ்நாடு உட்பட ஏராளமான மாநிலங்களில் இப்போது விவசாயமும் தொழிற்துறையும் கைகோர்த்து செல்வது பெருமளவு பொருளாதார வளர்ச்சியைத்தான் தரும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
விவசாய விளைபொருள் சந்தையில் தற்போது நவீன வசதிகள் இல்லாத பழைய அமைப்புகளையும், காலாவதியான முறைகளையும் பின்பற்றும் வியாபாரிகளே முழுமையாகக் கட்டுப்படுத்துகின்றனர். விற்பனை சந்தையில் போட்டி இல்லாததால் இந்த நிலை நீடிக்கிறது. போட்டி வரும்போது விவசாயிகளின் பேர வலிமை அதிகரிக்கும் என்பதே உண்மையாகும்.
இதை தமிழகத்தில் உள்ள புதிய தலைமுறை விவசாயிகள் புரிந்து கொண்டுள்ளனர். ஏனெனில் பழைய சந்தை முறைகளையும் மத்திய அரசு நீக்கிவிடவில்லை, புதிய கூடுதல் சந்தை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
அதனால்தான் தமிழகத்தில் திமுக கூறுவதை விவசாயிகள் ஏற்காமல் பந்த் -ஐ புறக்கணித்து விட்டனர். பல இடங்களில் கடைகள் மூடப்பட்டிருக்கலாம், சாலைகள் வெறிச்சோடி கிடக்கலாம் ஆனால் அதற்கும் விவசாயிகளுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர்.