ஈரோட்டில் பிஞ்சு குழந்தை கொலை.. 2 பேரை கைது செய்த போலீஸ்.!

ஈரோட்டில் பிஞ்சு குழந்தை கொலை.. 2 பேரை கைது செய்த போலீஸ்.!

Update: 2020-12-12 18:37 GMT

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் பிறந்து 19 நாட்களேயான குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காகவும், கொலையை மறைத்த குற்றத்திற்காகவும் சகோதரர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள சென்னம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் மணி. இவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான பவித்ரா  என்கின்ற பெண்ணிற்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
மணியுடன் அவரது பெற்றோர் மற்றும் தம்பி ரஞ்சித்தும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 3ம் தேதி பவித்ராவிற்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், பிறந்த 19ம் நாளான நவம்பர் மாதம் 21ம் தேதி, தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கையில் குழந்தை மூச்சுத்திணறி இறந்து போனதாகக் மணி மற்றும் அவரது குடும்பத்தினர் காரியங்களை செய்து வீட்டின் முன்பாக அடக்கம் செய்ததாக தெரிகிறது.

இது பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள், கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், கடந்த நவம்பர் 22ம் தேதி வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது குழந்தையின் உடல் தடவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதனால் பயந்து போன குழந்தையின் தந்தை மணி குழந்தையைத் தான் கொலை செய்ததாக கூறி நேற்று இரவு கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்துள்ளார். இதற்கு உடந்தையாக தன்னுடைய சகோதரரும் இருந்தார் எனக்கூறினார். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
 

Similar News