கடையில் வாங்கிய போண்டா.. வீட்டுக்கு சென்ற எஸ்.ஐ.க்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்.!

கடையில் வாங்கிய போண்டா.. வீட்டுக்கு சென்ற எஸ்.ஐ.க்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்.!

Update: 2020-11-28 12:08 GMT

நிலக்கோட்டை அருகே தனது குழந்தைகளுக்காக எஸ்.ஐ., ஒருவர் வாங்கி சென்ற போண்டாவில் பிளேடு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருபவர் கனகராஜ், இவருக்கு ஒரு மகனும், 2 பேத்திகளும் உள்ளனர்.
கனகராஜ் தனது பேத்திகளுக்காக, தான் வசித்து வரும் காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு எதிரே உள்ள கடையில் போண்டா வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதனை பேத்திகளிடம் கொடுத்துள்ளார். அப்பாது போண்டாவை பார்த்தபோது பிளேடு ஒன்று இருப்பதை பார்த்து கனகராஜ் அதிர்ச்சியடைந்துள்ளார். 

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு கனகராஜ் தகவல் கொடுத்துள்ளார். தகவலை தொடர்ந்து அதிகாரிகள் அந்த கடைக்கு விரைந்து சென்று கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.


அப்போது, போண்டா போட்ட ஊழியர் மெத்தன போக்கில் செயல்பட்டது தெரிய வந்ததையடுத்து அதிகாரிகள் எச்சரிக்கை செய்து விட்டு சென்றனர்.
முன்னதாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் குழந்தைக்காக வாங்கப்பட்ட சாக்லேட் ஒன்றில் பீடி துண்டு இருப்பது தெரியவந்துள்ளது.

Similar News