அரையாண்டுத் தேர்வு தள்ளிவைப்பு.. அமைச்சர் செங்கோட்டையன்.!

அரையாண்டுத் தேர்வு தள்ளிவைப்பு.. அமைச்சர் செங்கோட்டையன்.!

Update: 2020-12-12 11:45 GMT

கொரோனா தொற்று காரணமாக கல்லூரி மட்டும் தற்போதைக்கு திறக்கப்பட்டுள்ளது. அதுவும் இறுதியாண்டு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் இணையவழித் தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், மொடச்சூர், அயலூர், கலிங்கியம் உள்ளிட்ட ஊராட்சிகளில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளைப் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டுத் தேர்வை இணையவழியில் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

50 சதவீத பாடங்களைக் குறைப்பதுடன், எந்தெந்தப் பாடங்கள் நடத்தப்பட்டதோ அந்தப் பாடங்களில் இருந்து மட்டும் தான் வினாக்கள் இடம்பெறும் என்றும், தேர்வுக்கால அட்டவணை இரண்டு மூன்று நாட்களில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், 10,11,12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது பற்றி கேட்டதற்கு, அது மத்திய அரசின் நிலைப்பாடு, என்றும் தமிழக அரசின் நிலைப்பாடு அதுவல்ல என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பால் அரசு பள்ளி மாணவர்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர். எங்கே பள்ளிகள் நடத்தப்படாமலேயே தேர்வு வைத்துவிடுவார்களோ என அச்சப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News