18 வயது நிரம்பியவர்களுக்கு அரிய வாய்ப்பு.. இன்றும், நாளையும் சிறப்பு முகாம்.!

18 வயது நிரம்பியவர்களுக்கு அரிய வாய்ப்பு.. இன்றும், நாளையும் சிறப்பு முகாம்.!

Update: 2020-12-12 07:58 GMT

தமிழகத்தில் உள்ள, அனைத்து வாக்குச் சாவடிகளிலும், இன்றும், நாளையும், (டிசம்பர் 12, 13) வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் பணிகளை செய்து வருகிறது. 

அதில் புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் பட்டியல் திருத்தப் பணி நவம்பர் 16ம் தேதி துவங்கியது. அன்றைய தினம், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றுவது வரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  கடந்த, 21ம் தேதி நடந்த முகாமில், 5.43 லட்சம் விண்ணப்பங்கள் வந்தது. இதில், 4.38 லட்சம் விண்ணப்பங்கள் பெயர் சேர்க்கக் கோரி வரப்பெற்றுள்ளது.

அதேபோன்று 22ம் தேதி நடந்த முகாமில், 8.03 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில், 6.14 லட்சம் பேர், பெயர் சேர்க்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர்.

மீண்டும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும், இன்றும், நாளையும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இம்முகாமில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி 15ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Similar News