வாரம் 3 முறை சிறப்பு ரயில்.. தாம்பரம், நாகர்கோவில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.!

வாரம் 3 முறை சிறப்பு ரயில்.. தாம்பரம், நாகர்கோவில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.!

Update: 2020-12-12 18:17 GMT

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் இடையே டிசம்பர் 16ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வாரத்திற்கு 3 முறை அதாவது ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை டிசம்பர் 16ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

ரயில்கள் இயக்க நாட்களில் இரவு 7.25க்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7.30க்கு நாகர்கோவிலை அடையும். பின்னர் அங்கிருந்து மாலை 4.15க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 4.14க்கு தாம்பரம் வந்தடையும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News