வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.. ட்விட்டரில் பதிவிட்ட ரஜினிகாந்த்.!
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.. ட்விட்டரில் பதிவிட்ட ரஜினிகாந்த்.!
தமிழ் திரைப்படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் ரஜினிகாந்த். இன்று அவர் தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அடுத்த மாதம் கட்சி தொடங்கவிருப்பது அவரது ரசிகர்களை இன்னும் உற்சாகம் அடையச் செய்துள்ளது.
பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் வாயிலில் ஏராளமான ரசிகர்கள் ஒன்றுகூடி உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடினார்கள். அங்கு இருப்பவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதுமட்டுமின்றி, நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று என்னை வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலினுக்கும் மத்திய மாநில அரசியல் நண்பர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும் சக திரைக்கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் மற்றும் உற்சாகத்துடன் என் பிறந்தநாளைக் கொண்டாடிவரும் உலகெங்கிலும் உள்ள என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஏராளமான ரசிகர்கள் ரீ ட்விட் செய்து வருகின்றனர். இன்றும், நாளையும் ரசிகர்களுக்கு அன்னதானம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.