கொரோனாவுக்கு பின்னர் இயக்கப்பட்ட ரயில்.. பூஜை செய்து வழியனுப்பிய வள்ளியூர் பாஜகவினர்.!

கொரோனாவுக்கு பின்னர் இயக்கப்பட்ட ரயில்.. பூஜை செய்து வழியனுப்பிய வள்ளியூர் பாஜகவினர்.!

Update: 2020-12-08 10:34 GMT

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் மாதம் இருந்து பயணிகளின் ரயில்வே சேவைகள் முற்றிலும் முடங்கியது. சரக்கு ரயில் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட சேவைகள் தொடர்ந்து இயங்கி வந்தது. இந்நிலையில், நாகர்கோவில்-- மும்பை ரயில் கொரானோ கால இடைவெளியில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது நேரம், பயண வழிகள் மாற்றம் செய்யப்பட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து முதல் சேவையை துவக்கியது.

மும்பையில் இருந்து வரும் ரயில் இனிமேல் வழக்கமாக திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் காலை 10 மணிக்கு வந்தடையும். இந்நிலையில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவைக்கு வள்ளியூர் நகர பாஜக தலைவர் சிவராமகுட்டி தலைமையில் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் ராம்நாத் ஐயர்  முன்னிலையில் ரயிலுக்கு மாலை அணிவித்து, பூஜை செய்து சிறப்பான வரவேற்பு அளித்ததோடு, பயணிகள் அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கினர்.

இந்நிகழ்வில் நகர துணைத்தலைவர்கள் கண்ணண், புருஷோத்தமன், நகர பொதுச்செயலாளர் ராஜேஷ் நகர செயலாளர்கள் ஆழ்வார் நம்பி பொருளாளர் பழனிராஜ் வர்த்தக அணி தலைவர் அய்யம்பெருமாள், இளைஞரணி தலைவர் பிரவீண்ராஜ், மாணிக்கம் உள்ளிட்ட  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News