வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது பா.ஜ.க தான்: அசாமில் பிரதமர் பிரச்சாரம்.!
பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மாநிலத்தில் போகாஹாட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். பிரதமர் தனது உரையை அசாமியில் வாழ்த்துக்களுடன் தொடங்கினார். அசாமில் இரண்டாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என போகாஹோட்டில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கூறினார். "மத்தியிலும், மாநிலத்திலும் என அசாமுக்கு இரட்டை எஞ்சின் அரசு கிடைக்கும் என்று இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று பிரதமர் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் இரட்டை என்ஜின் அரசு மாநில மக்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள், LPG, மின்சாரம் மற்றும் இலவச சுகாதார வசதி கிடைப்பதை உறுதி செய்தது என்று மோடி கூறினார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் செய்யத் தவறிய, மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றான காண்டாமிருகங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மாநில அரசு தான் காப்பாற்றியது என்று பிரதமர் கூறினார். பொதுக் கூட்டத்தில் மோடி பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே நான்கு வழிச்சாலையை மேம்படுத்துவது குறித்தும் பேசினார். மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இது தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் காலத்தில் நடந்தது என்று கூறினார்.
காங்கிரஸ் அரசாங்கத்தை விமர்சித்த பிரதமர், மாநிலத்தில் எண்ணெய் மற்றும் பெட்ரோலியத் துறையின் வளர்ச்சிக்காக, ரூ 40,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார். பரவுனி-குவஹாத்தி எரிவாயு குழாய்த்திட்டத்தின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டி, இந்த குழாய் ஒவ்வொரு வீட்டிற்கும் மலிவு விலையில் எரிவாயுவை வழங்கும் என்றும், CNG மூலம் இயங்கும் போக்குவரத்துக்கு ஒரு ஊக்கமளிக்கும் என்றும் வணிகங்கள் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் கூறினார். சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க ரூ 1,000 கோடி முதலீடுகளை உறுதி செய்துள்ளது என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.