நேருவிற்கு பிடித்தமான பிராண்ட் 555 சிகரெட்டை வாங்க பயன்படுத்திய சிறப்பு அரசு விமானம்!

Update: 2021-03-01 12:17 GMT

பண்டித ஜவகர்லால் நேருவை ஒருவர் பல காரணங்களுக்காக நினைவு வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக அவர் சுதந்திர இந்தியாவில் முதல் பிரதமர், அல்லது இந்தியாவின் முதல் பெண் பிரதமரின் தந்தை, ஒரு சுதந்திர போராட்ட வீரர் எல்லாவற்றிற்கும் நல்ல பொறுப்புள்ள ஒரு தொலைநோக்கு பார்வையாளர் என நீங்கள் அவரை நினைவில் கொள்ளலாம். ஆனால் அவருடைய வாழ்க்கையில் மறுபக்கத்தை என்றாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி கேள்விப்படாதவராக இருந்தார்களே ஆனால் இந்த பதிவு உங்களை ஒரு அதிர்ச்சிக்குள்ளாக்கும்.


நேருவிற்கு பிடித்தமான ஒரு விஷயம் உண்டு என்றால், அது அவருடைய புகைப்பிடித்தல் பழக்கம். அவருடைய உணவிற்குப்பின் நிச்சயம் அவர் சிகரெட்டை பிடிப்பது வழக்கம். அவருடைய பல புகைப்படங்களில் அவர் புகைப்பிடித்தல் போன்ற பல காட்சிகளில் தான் தோன்றி இருப்பார். காரணம் அன்றைய பிரதமருக்கு சிகரத்தின் மீது அலாதிப் பிரியம்தான். ஆனால் அன்றைய காலகட்டத்தில் மக்கள் குளிர்ச்சியான பகுதியில் இருப்பதால், புகைபிடிக்கும் பழக்கத்தில் கொண்டார்கள். ஆனால் இது ஒரு மோசமான பழக்கம். அது தங்களை அடிமையாக்கி விடும். இறுதியில் தங்களுடைய உயிர்களை கூட பறிக்கும் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. இதற்கு உதாரணமாக, 2009 ஆம் ஆண்டு முகேஷ் என்ற இளைஞர் தனக்கு இருந்த மோசமான புகை பிடித்தல் பழக்கம் காரணமாக இருந்திருக்க மாட்டார்.

முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் பிராண்ட் 555 என்று சிகரெட்டின் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தார். இந்த விஷயம் இன்று வரை எத்தனை பேருக்கு தெரியும்? குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் பிரதமர் நேரு ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக போபால் வரை சென்று இருந்தார். ​​ கடைசியில் அவர் ராஜ் பவனில் தங்க திட்டமிடப் பட்டிருந்தார். இருப்பினும், அவருக்கு பிடித்த பிராண்ட் சிகரெட் ராஜ் பவனில் இல்லை என்பதை ஊழியர்கள் உணர்ந்தனர். உண்மையில், இது போபாலில் கிடைக்கவில்லை. நேரு தனது உணவுக்குப் பிறகு புகைப்பது வழக்கம் என்பது ஊழியர்களுக்கு தெரியும். ஊழியர்கள் அவருக்கு மற்றொரு பிராண்டை வழங்கி இருக்கலாம் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் நேருவுக்கு பிடித்தமான பிராண்ட்ற்காக ஊழியர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?


Screenshot of Raj Bhawan Anecdotes available on MP government's website

அவர்கள் தனி விமானம் ஒன்றை ஏற்பட செய்தார்கள். குறிப்பாக போபாலில் இருந்து அருகில் உள்ள இந்தூர் வரை விமானம் பறந்து சென்றது. பிறகு இந்தூரில் பிராண்ட் 555 சிகரெட் வாங்கி கொண்டு,மீண்டும் போபால் வரை தனி விமானம் பறந்து வந்தது. குறிப்பாக அது அரசு செலவில் இயக்கப்பட்டு வரும் ஒரு விமானம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே அன்று முதல் இன்று வரை நேரு காந்தி குடும்பத்தினர் அரச வளங்களை தங்களுடைய சொந்த பயன்களுக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், இந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் INS விராத்தை    தங்களின் சொந்த டாக்ஸியாக பயன்படுத்தி, அவர்கள் பாதுகாப்புப் படைகளை அவமதித்துள்ளனர். INS விராட் நாட்டின் கடல் எல்லைகளில் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அது ராஜீவ் காந்தி அவர்களின் குடும்பத்தை விடுமுறைக்கு ஏற்றி வரும் டாக்ஸி ஆக பயன்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Similar News