வசிப்பதும், வளர்வதும் இந்தியாவில் ஆனால் வாலாட்டி நன்றி தெரிவிப்பது சீனத்திற்கு - தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினரின் சீன விசுவாசம் !

சீனா'வின் பூர்வகுடிகள் வாரிசு போல் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ஐ.எம் கட்சி சீனா 200 கோடி டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை புரிந்ததாக தனது ட்விட்டர் பதிவில் படம் பதிவிட்டு கொண்டாடியது.

Update: 2021-08-28 07:45 GMT

கொரோனோ வைரசை பரப்பிய சீனா'விற்கு தனது விசுவாசத்தை காண்பித்து வாலாட்டியுள்ளது தமிழக சி.பி.ஐ.எம்.

உலகம் முழுவதையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப் படைத்து மக்களை வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து மாற்றியுள்ளது சீனா'வில் தோன்றிய 'கோவிட் 19' என்ற வைரஸ். 'வூகான் வைரஸ்' என்றே கொரோனோ வைரசை உலகநாடுகள் விமர்சித்து வரும் நிலையில், இந்தியாவில் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இதுவரை 60 கோடி பேருக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டுமே 1 கோடி பேருக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது தவிர உலகநாடுகள் பலவற்றிற்கும் இந்தியா தடுப்பூசியை அளித்து உதவி வருகிறது. கொரோனோ வைரசை பரப்பி உலக அமைதியை கெடுத்தது சீனா ஆனால் பாராசிட்டமால் மாத்திரைகளை முதல் தடுப்பூசி வரை உலகாநாடுகளுக்கு தன் நாட்டின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு மற்ற நாடுகளுக்கும் அளித்து உதவி செய்தது இந்தியா.

இந்நிலையில் நேற்று இந்தி அளவில் ஒரு கோடி தடுப்பூசி போட்டு சாதனை படைத்த நிலையில் சீனா'வின் பூர்வகுடிகள் வாரிசு போல் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ஐ.எம் கட்சி சீனா 200 கோடி டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை புரிந்ததாக தனது ட்விட்டர் பதிவில் படம் பதிவிட்டு கொண்டாடியது.




 


வசிப்பதும், வளர்வதும் இந்தியாவில் ஆனால் விசுவாசத்தை காட்டுவது 'வூகான் வைரஸை பரப்பிய சீனா'விற்கு என பர தரப்பினரும் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்து வருகின்றனர்.

Tags:    

Similar News