கெய்ன்ஸ் செமிகான் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!!
By : Bharathi Latha
Update: 2026-04-01 12:07 GMT
குஜராத்தில் ₹3,300 கோடி மதிப்பிலான கெய்ன்ஸ் செமிகான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது இந்தியாவின் உற்பத்தித் திறனை வலுப்படுத்தி, சிப் உற்பத்தியில் நாட்டை உலகளவில் முக்கிய மையமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலையில் முதற்கட்டமாக இன்டெலிஜென்ட் பவர் மாட்யூல் (ஐபிஎம்) உற்பத்தி செய்யப்பட உள்ளது. இவை வாகனங்கள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்குத் தேவையான முக்கிய பாகங்கள்.
இந்த ஆலையின் அனைத்துக் கட்டப் பணிகளும் நிறைவடையும் போது, நாளொன்றுக்கு சுமார் 63 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக விளங்கும்.