ஆர்யகானுக்கு வீட்டில் இருந்து அம்மா அனுப்பிய சாப்பாடு: திருப்பி அனுப்பிய சிறை நிர்வாகம்!

சொகுசுப் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு அவரது அம்மா காலை டிபனை அனுப்பியுள்ளதை சிறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

Update: 2021-10-10 12:54 GMT

சொகுசுப் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு அவரது அம்மா காலை டிபனை அனுப்பியுள்ளதை சிறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

அக்டோபர் 3ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சாதாரண பயணிகள் போன்று கண்காணித்தனர். அப்போது கப்பலில் போதை பார்ட்டி நடைபெற்றதில் பலர் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர். அதில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் உட்பட 8 பேரை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் உள்ளிட்டவர்களின் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சிறையில் இருந்த ஆர்யன்கானுக்கு அவரது அம்மாவும் நடிகர் ஷாருக்கானின் மனைவியுமான கவுரிகான் வீட்டில் இருந்து காலை டிபன் மற்றும் மதியம் சாப்பாடு அனுப்பியிருந்தார். அப்போது சிறை நிர்வாகம் உள்ளே கொடுப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.

Source, Image Courtesy: News 7 Tamil


Tags:    

Similar News