பதவி ஏற்புவிழாவிற்கு முன்பே களத்தில் இறங்கிய உடன்பிறப்புகள் - அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கினர்!

Update: 2021-05-04 06:00 GMT

இன்னும் பதவி ஏற்பு விழாவே நடக்காத நிலையில் சென்னை ஜே.ஜே நகரில் தி.மு.க'வினர் 'அம்மா' உணவகத்தில் ரகளையில் ஈடுபட்டு அடித்து, உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க'வை வென்று தி.மு.க ஆட்சியை கைப்பற்றியது. இதனைதொடர்ந்து இன்று மாலை நடைபெறும் எம்.எல்.ஏ'க்கள் கூட்டத்தில் ஒழுமனதாக ஸ்டாலின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இதனையடுத்து வரும் 7'ம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். ஆனால் தற்பொழுதே தி.மு.க'வினர் அராஜகத்தில் ஈடுபட துவங்கிவிட்டனர். சென்னை ஜே.ஜே.நகரில் செயல்பட்டு வரும் 'அம்மா' உணவகத்தை அடித்து அங்கிருத்த பலகை, கூரை ஆகியவற்றை நொறுக்கியுள்ளனர் தி.மு.க'வினர்.

Full View

இந்த சம்பவத்தின் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

Source - NEWS J

Similar News