காங்கிரஸ் கட்சியினருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய பொதுமக்கள் நிலை...? யார் காரணம் அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்..!

Update: 2024-05-04 12:37 GMT

திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்த கே பி கே ஜெயக்குமார் தன்சிங் கடந்த இரண்டாம் தேதி இரவு ஏழு முப்பது மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் ஆனால் அவர் இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மகன் காவல் நிலையத்தில் தந்தையை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்ததை எடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். 

இந்த நிலையில் திசையன்விளை அருகே தோட்ட வீட்டில் ஜெயக்குமார் தன் சிங்கின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். 

அதாவது, காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. 

கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திரு.ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு.தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார்க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது. 

உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Source : Asianet news Tamil 

Similar News