பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வீட்டு சமையலறை பொருள்.!

Update: 2021-05-31 00:30 GMT

நம் எல்லோர் வீட்டிலும் இந்த பிரியாணி இலை என்பது கண்டிப்பாக இருக்கும். பிரியாணி என்றாலே சரி, கண்டிப்பாக இந்த பிரியாணி இலை இல்லாமல் செய்யவே மாட்டோம். இந்த இலையை சேர்த்தால் வாசமாக இருக்கும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் அதை விடவும் பல சிறப்பான, ஆரோக்கியமான விஷயங்கள் இந்த பிரியாணி இலையில் உண்டு. அவை என்னென்ன மருத்துவ குணங்கள் என்பதை தான் இப்போது பார்ப்போம். 


பிரியாணி இலையின் சாறு மற்றும் இதிலிருக்கும் எண்ணெய் இரண்டும் எஸ்கெரிச்சியா கோலி, சால்மோனெல்லா டைபி, சூடோமோனாஸ் ஏருகினோசா, பேசிலஸ் செரியஸ் மற்றும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் போன்ற பல்வேறு பாக்டீரியாகளுக்கு எதிராக சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இந்திய பிரியாணி இலை சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. பிரியாணி இலை இரத்தத்தில் குளுக்கோஸைக் குறைக்கும் சக்திவாய்ந்த திறன் கொண்டது. இது நீரிழிவு நோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. 


இந்த பிரியாணி இலையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சீரம் குளுக்கோஸ் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைவதாக கண்டறியப் பட்டுள்ளது. இதன் மற்றொரு முக்கியமான மருத்துவ பயன்பாடு கொலஸ்ட்ரால் குறைக்கும் விளைவு ஆகும். பிரியாணி இலை இரைப்பை மற்றும் கல்லீரலைப் பாதுகாக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. பிரியாணி இலைச் சாறு பாரம்பரியமாக வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. அதோடு, பிரியாணி இலை சாறு புண் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.


Tags:    

Similar News