உடல் உறுப்பு தானத்தை முறைப்படுத்துவதற்கு தேசிய கொள்கை வலியுறுத்தி மத்திய அரசுக்கு உத்தரவு!!
By : G Pradeep
Update: 2025-11-20 08:24 GMT
இந்தியன் சொசைட்டி மத்திய அரசு உடல் உறுப்பு தானம் செய்வது தொடர்பாக தேசிய அளவில் கொள்கையை உருவாக்க வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி வினோத் சந்திரன் போன்ற தலைமை நீதிபதிகள் விசாரணை செய்தனர். மனுதாரர் தரப்பில் கூறப்பட்ட கோரிக்கைகளை கேட்டு அறிந்து மாநில அரசுடன் கலந்தாலோசித்து உடல் உறுப்பு தானத்தை முறைப்படுத்துவதற்கு தேசிய அளவில் கொள்கை வகுக்கப்படும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.