தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு!! கவலைக்குரிய சம்பவங்கள்!!
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகத் தெரிகிறது. குளத்தூரில் 17 வயது மாணவி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. மதுராந்தகம், சேலம், அயனாவரம் பகுதிகளில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கஞ்சா, போதைப் பொருட்கள் புழக்கம்தான் இதற்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் எனச் சொல்லிக்கொள்ளும் திமுக அரசு, பெண்களுக்கு வீதியில் நடக்கும் தைரியத்தைக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குற்றவாளி தர்ம முனீஸ்வரன் ஏற்கெனவே ஒரு பாலியல் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த டிசம்பரில்தான் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறான். இப்படிப்பட்ட கிரிமினல்கள் ஊருக்குள் சுதந்திரமாக உலவுவதை உளவுத்துறை கவனிக்கத் தவறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகக் காவல்துறை தன்னாட்சியாகச் செயல்படுகிறதா அல்லது ஆளுங்கட்சியின் நிழலில் இயங்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. புள்ளிவிவரங்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல், சாமானியப் பெண்களுக்கு வீதியில் இறங்கி நடக்கும் தைரியத்தைக் கொடுக்க வேண்டும்.