பாஜக - பாமக இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்! பாமகவிற்கு 10 தொகுதிகள்!

Update: 2024-03-19 10:47 GMT

லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த நடவடிக்கைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் வேகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

மேலும் திமுக அதன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகள் அனைத்தையும் முடிவு செய்து அறிவித்துவிட்டது. அதே சமயம் கடந்த சில நாட்களாக பாஜக கட்சியுடன் சில முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து வரும் செய்திகளும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்பதற்காக பாமகவின் உயர்மட்ட குழு கூடியது, மேலும் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த ஆலோசனைகளையும் இக்கட்சியினர் மேற்கொண்டுள்ளனர். 

கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக மாநில பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், லோக்சபா தேர்தலில் எங்களது கூட்டணி பாஜகவுடன் இறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார். அதோடு இன்று காலை பாஜக மற்றும் பாமக கட்சிகளிடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

Source : Dinamalar 

Similar News