வளர்ச்சியடைந்த இந்தியா 2047.. ஜம்மு காஷ்மீர் இல்லாமல் எப்படி? பிரதமர் கூறிய அறிவுரை..

Update: 2023-12-26 01:25 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று காலை அவரது இல்லத்தில் ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் குழுவுடன் கலந்துரையாடினார். ஜம்மு காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். மத்திய அரசின் 'நாட்டை அறிந்து கொள்ளுங்கள் - இளைஞர் பரிமாற்ற திட்டம் 2023' இன் கீழ் ஜெய்ப்பூர், அஜ்மீர் மற்றும் புது தில்லிக்கு மாணவர்கள் பயணம் மேற்கொண்டனர். ஒரே இந்தியா சிறப்பான இந்தியா என்ற உணர்வில், நாட்டின் கலாச்சார மற்றும் சமூக பன்முகத்தன்மையை ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு காண்பிப்பதை இந்த பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


கலந்துரையாடலின் போது, மாணவர்களின் பயண அனுபவம் மற்றும் அவர்கள் பார்வையிட்ட புகழ்பெற்ற இடங்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். ஜம்மு-காஷ்மீரின் வளமான விளையாட்டு கலாச்சாரம் குறித்து பிரதமர் விவாதித்தார். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் மாணவர்கள் பங்கேற்பது குறித்து கேட்டறிந்தார். ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்ற ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இளம் வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவியை பிரதமர் உதாரணம் காட்டினார். ஜம்மு-காஷ்மீரின் இளைஞர்களின் திறமையைப் பாராட்டிய பிரதமர், அவர்கள் எந்தத் துறையிலும் சிறந்து விளங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.


வளர்ச்சியடைந்த இந்தியா @2047 கனவை நனவாக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் மாணவர்கள் பாடுபட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் கட்டப்படுவது குறித்து பேசிய பிரதமர், இது பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும் என்றார். சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா -எல் 1 திட்டத்தின் வெற்றி குறித்து மாணவர்களுடன் பிரதமர் விவாதித்தார், இந்த அறிவியல் சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப் படுத்தியுள்ளன என்றார். காஷ்மீரில் ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், நாட்டை தூய்மையாக மாற்றுவதற்கான முயற்சிகள் குறித்தும் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News