பாகிஸ்தான்: 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் புதுப்பிப்பு!

பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-01-06 00:30 GMT

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் தேரி கிராமத்தில் உள்ள மகாராஜா பரம்ஹன்ஸ் ஜி ஆலயம் ஓராண்டுக்கு முன்பு, ஒரு கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது. மேலும் இந்த கோவில் பாகிஸ்தானில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மகாராஜா பரம்ஹன்ஸ் ஜி கோவிலை தீவிர இஸ்லாமியக் கட்சியைச் சேர்ந்த கும்பல் இடித்து ஒரு வருடத்திற்குப் பிறகு, தற்பொழுது மீண்டும் கோவில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கோவில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்தும் வருகிறார்கள். இந்தியா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்து யாத்ரீகர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரார்த்தனை செய்தனர்.   


மேலும் இந்த கோவில் 2020 அன்று, ஒரு பயங்கரமான கும்பலால் தாக்கப்பட்டது. மேலும் அந்த செயல் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ஆல் கண்டனத்திற்கு உள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தற்போது பாகிஸ்தான் அரசாங்கம் இந்த கோவிலை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டு தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக இங்கு இந்து யாத்திரீகர்கள் பிரார்த்தனை செய்ய வந்துள்ளார்கள். இந்திய யாத்ரீகர்கள் லாகூர் அருகே வாகா எல்லையைத் தாண்டி, ஆயுதம் தாங்கிய பணியாளர்களால் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 


இந்த நிகழ்ச்சியை பாகிஸ்தான் இந்து கவுன்சில் அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் உடன் இணைந்து ஏற்பாடு செய்தது. வருகையின் நாளில், இறுதிச்சடங்கு நினைவுச்சின்னம் மற்றும் தேரி கிராமம் 600 ரேஞ்சர்களால் பலப்படுத்தப்பட்டது. உளவுத்துறை மற்றும் விமான நிலையப் பாதுகாப்புப் படை காவல் கண்காணிப்பாளர், நிலை அதிகாரி தலைமையில் காவலில் இருந்தது. சடங்குகள் பிற்பகல் வரை நடந்ததாக இந்து கவுன்சில் உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

Input & Image courtesy: Thr hindu




Tags:    

Similar News