மோடி மீண்டும் பிரதமராக வேண்டி 122 வயது மூதாட்டி மலை மாதேஸ்வரா சாமி கோவிலுக்கு நடை பயணம்!

மோடி மீண்டும் பிரதமராக வேண்டி 102 வயது மூதாட்டி நடை பயணம் மேற்கொண்டார்.அவர் பிரதமரானால் நாடும் நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-09 05:21 GMT

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் திப்தூரைச் சேர்ந்தவர் பர்வதம்மா. இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக மகா சிவராத்திரி விழாவை ஒட்டி மலை மாதேஸ்வரா சாமி கோவிலுக்கு நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.இந்த நிலையில் பர்வதம்மா இன்று நடைபெறும் சிவராத்திரி விழாவை ஒட்டி நேற்று மாதேஸ்வரன் மலை அருகே உள்ள தலபெட்டா பகுதிக்கு உறவினர்களுடன் வந்தார். அவர் தள்ளாத வயதிலும் அங்கிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலை மாதேஸ்வரர் கோவிலுக்கு நடை பயணம் மேற்கொண்டார்.


அவரிடம் சில பக்தர்கள் எதற்காக நடைபயணம் மேற்கொள்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு பர்வதம்மா இந்த நாடும் நாட்டு மக்களும் நலமாக இருக்க வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்.அது போல் நல்ல மழை பெய்ய வேண்டும். அதன் மூலம் நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும் என்பதற்காக மலை மாதேஸ்வராவிடம் வேண்டுதல் வைக்க இருப்பதாகவும் அதனால் சிவராத்திரி விழாவை ஒட்டி நடைபயணம் மேற்கொள்ளதாகவும் கூறினார்.

அதற்கு அந்த பக்தர்கள் உங்கள் ஆசியுடன் மோடி மீண்டும் பிரதமராக வருவார் என பர்வதம்மாவிடம் கூறினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று 102  வயதில் மலை மாதேஸ்வரர் கோவிலுக்கு நடை பயணம் மேற்கொள்ளும் மூதாட்டியை பாராட்டியும் வாழ்த்தியும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

Similar News