ஊரடங்கு முடிந்ததும் ஊருக்கு வருகிறேன், அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் அரசு உத்தரவை கடைபிடியுங்கள் - உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தன் தாய்க்கு எழுதிய கண்ணீர் கடிதம்.!
ஊரடங்கு முடிந்ததும் ஊருக்கு வருகிறேன், அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் அரசு உத்தரவை கடைபிடியுங்கள் - உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தன் தாய்க்கு எழுதிய கண்ணீர் கடிதம்.!
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் இன்று காலை 10.44 மணிக்கு எய்ம்ஸில் காலமானார். அவர் கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகப்பணிகள் தொடர்பாக ஒரு கூட்டத்தில் இருந்தபோது, அவரது தந்தை இறந்த செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அனாலும் முதல்வர் யோகி தனது கூட்டத்தைத் தொடர்ந்தார், மாநிலத்தில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்த அந்த அவசரக் கூட்டத்தை முடித்த பின்னரே எழுந்தார்.
பின்னர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது தந்தை காலமானதை அடுத்து தனது மனதில் எழுந்த வேதனையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை தனது குடும்பத்தினருக்கு எழுதியுள்ளார், அதில் அவர் இக்கட்டான இந்த சமயத்தில் தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக தனது தந்தை, தாயிடம் மன்னிப்பு கோருவதாக எழுதியுள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது தந்தையின் மரணத்தால் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனை அடைந்து அந்த கடிதத்தை எழுதியுள்ளார். தனது தந்தை தனக்கு கடின உழைப்பை கற்றுக் கொடுத்ததாகவும், அந்த சிறந்த பண்பே பிறருக்காக உண்மையாக உழைக்கும் தன்னலமற்ற குணத்தை தனக்கு தந்தது என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
தனது தந்தை வாழ்ந்த கடைசி தருணங்களில் ஒரு முறையாவது தனது தந்தையைப் பார்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அக்கடிதத்தில் எழுதுகிறார், இருப்பினும், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் மற்றும் தனது மாநிலத்தின் 23 கோடி மக்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு காரணமாக அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஊரடங்கு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொறுப்பு காரணமாக, இறந்த தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கூட தன்னால் பங்கேற்க முடியவில்லை என்றும் அவர் அந்த கடிதத்தில் கூறுகிறார்.