புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார் - நடிகர் அமிதாப்பச்சன்.!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார் - நடிகர் அமிதாப்பச்சன்.!

Update: 2020-06-11 07:52 GMT

கொரோனா வைரஸ் காரணத்தால் தற்போது பல தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பல மாநிலங்களில் தவித்து கொண்டி இருந்த 1.25 கோடி புலம்பெர்ந்த தொழிலாளர்களை மத்திய அரசு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ‌

இந்நிலையில் நடிகர் சோனசூட் தொடர்ந்து கஷ்டப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில், விமானம் மூலம் அனுப்பிவைத்து வருகிறார்.

தற்போது பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். மும்பை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 1,547 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பிரயாக்ராஜ், வாரணாசி, கோரக்பூர் இடங்களுக்கு பகுதிகளுக்கு ஆறு விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். நேற்று இரண்டு விமானம் புறப்பட்டுள்ளது.  

Similar News