இந்தியா - சீனா எல்லை மோதலில் தமிழகம் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீர மரணம்!
இந்தியா - சீனா எல்லை மோதலில் தமிழகம் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீர மரணம்!
லடாக் எல்லையில் இந்திய ராணுவத்துக்கும் மற்றும் சீனா ராணுவத்துக்கும் நடைபெற்ற மோதலில் உயர் அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
வீர மரணம் அடைந்த இரண்டு ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டத்தை பழனி என்பவர் என தெரிவியவந்துள்ளது. அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 22 வருடமாக இந்திய ராணுவத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு வயது 40 ஆகும்.
மேலும் அவருக்கு 10 வயது மகன் மற்றும் 8 வயது மகள் இருக்கின்றனர். அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் ராமநாதபுரத்தில் வசித்து வந்தனர் என தெரியவந்தன. பின்னர் அவருடைய உடல் நாளை காலை 9 மணி முதல் 12 மணிக்குள் கொண்டு வந்து அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட உள்ளது என தகவல் வந்துள்ளது.