ஊழலுக்கு எதிராக பாஜக போராடுகிறது - ஆந்திராவில் அமித் ஷா பிரச்சாரம்.....!
ஆந்திர பிரதேசம் தர்மவரத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதில், மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்! அதோடு ராகுல் உட்பட இண்டி கூட்டணி தலைவர்கள் யாரும் பிரதமராவதற்கு தகுதியற்றவர்கள்.
ஆந்திராவில் பாரதிய ஜனதா, ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றிற்கு எதிராக போராடுகிறது.
அதிலும் குறிப்பாக ஆந்திராவின் அமராவதியை மீண்டும் தலைநகராக்குவதற்காக ஜனசேனா மற்றும் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறோம் என்று பேசியுள்ளார்.
Source : Dinamalar