பதநீர் மற்றும் பனைவெல்லம் தயாரிக்க புதிய திட்டம் - மத்திய அரசு அதிரடி!
பதநீர் மற்றும் பனைவெல்லம் தயாரிக்க புதிய திட்டம் - மத்திய அரசு அதிரடி!
பதநீர் மற்றும் பனைவெல்லம் தயாரிக்க புதிய திட்டத்தை, காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் (KVIC) தொடங்கியுள்ளது. இத்திட்டம் நாட்டில் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடியது. குளிர்பானங்களுக்கு மாற்றாக, பதநீரை ஊக்குவிக்கவும், பழங்குடியின மக்களுக்கு சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்துவதும் தான் இந்ததிட்டத்தின் இலக்கு. இத்திட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள தானு என்ற இடத்தில் செவ்வாய்கிழமை தொடங்கப்பட்டது. இங்கு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன.
பதநீர் வடித்து பனைவெல்லம் தயாரிப்பதற்கான உபகரணங்களை, 200 உள்ளூர் தொழிலாளர்களுக்கு கேவிஐசி வழங்கியது. இதற்கான 7 நாள் பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ₹15,000 மதிப்புள்ள எவர்சில்வர் கடாய், பதநீர் வடிக்கும் பாத்திரங்கள், அடுப்புகள், மற்றும் இதரப் பொருட்களான கத்திகள், கயிறு மற்றும் பதநீர் வடிப்புக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நடவடிக்கை 400 உள்ளூர் பாரம்பரிய தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை வழங்கும்.
வேலை வாய்ப்பை அதிகளவில் உருவாக்கும் திறன் கொண்ட, பதநீர் மற்றும் பனை வெல்லம் உற்பத்தி செய்யும் தனிச்சிறப்பான திட்டத்தை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் (@kvicindia) தொடங்கியுள்ளது. pic.twitter.com/p5OHs7vuel
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) June 17, 2020
சூரிய உதயத்துக்கு முன் பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீர், ஊட்டச்சத்து நிறைந்த பானம். இந்தியாவின் பல மாநிலங்களில் இது அருந்தப்படுகிறது. ஆனால், இதை முறையாக சந்தைப் படுத்தாததால், இதை வர்த்தக ரீதியாக அதிகளவில் உற்பத்தி செய்வது இன்னும் தொடங்கப்படவில்லை.