கணவருடன் சேர்ந்து உடல் உறுப்புகளை தானம் செய்த ஜெனீலியா - குவியும் பாராட்டுக்கள்.!
கணவருடன் சேர்ந்து உடல் உறுப்புகளை தானம் செய்த ஜெனீலியா - குவியும் பாராட்டுக்கள்.!
நடிகை ஜெனிலியா தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்பட்ட கதாநாயகிகளில் ஒருவர். 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தில் அவரது அப்பாவியான பப்ளி கதாபாத்திரம், அந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் கதாபாத்திரமாக உள்ளது.
இவர், நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு படங்களில் இருந்து விலகி, குடும்பத்தை கவனித்து வருகிறார் ஜெனிலியா.
உறுப்பு தானம்:
ஜெனிலியாவும் நானும் அதைப் பற்றி பலமுறை விவாதித்தோம், ஆனால் அதைப் பற்றி நாங்கள் உங்களிடம் சொல்ல முடியவில்லை.
ஜூலை 1 ஆம் தேதி, நாங்கள் இருவரும் எங்கள் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளித்ததாக அறிவிக்க விரும்புகிறோம் என இன்ஸ்டாகிராமில் கூறினர்.