அ.தி.மு.க கூட்டணிக்கு எதிராக களம் இறங்கிய 23 முஸ்லிம் அமைப்புகள், எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு! அதிர்ச்சி பின்னணி!
அ.தி.மு.க கூட்டணிக்கு எதிராக களம் இறங்கிய 23 முஸ்லிம் அமைப்புகள், எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு! அதிர்ச்சி பின்னணி!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, தமிழகத்திலுள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் வரிந்துகட்டிக்கொண்டு அதிமுக கூட்டணிக்கு எதிராக களம் இறங்கின. அவர்கள் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது முஸ்லிம் ஓட்டுகள் ஒரு ஓட்டு கூட அதிமுக கூட்டணிக்கு கிடைக்காத வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஜமாத்தில் மூலம் பிரச்சாரம் செய்தனர். சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போதும், பல ஊர்களில் ஜமாத்தார்கள் தெருவில் இறங்கி மைக் வைத்து பேசினார்கள். அப்போது அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டாம் என்று வலியுறுத்தினார்கள். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முஸ்லிம் மதவெறி கட்சிகளின் தலைவர்களுக்கு பேரிடியாக அமைந்தன. அவர்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை திமுக கைப்பற்றும், அதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று கணித்திருந்தனர்.
அந்த கணிப்பு முழுவதுமாக தகர்த்து எறியப்பட்டது. பாராளுமன்ற தேர்தலின்போது 39 எம்பிக்களுக்கு ஒரே ஒரு எம்பியை மட்டுமே பெற்ற அதிமுக கூட்டணி, சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு சரிசமமாக இடங்களை கைப்பற்றியது. அதோடு அதிமுகவின் ஓட்டு சதவீதமும் கணிசமாக உயர்ந்தது. அதோடு ஊராட்சி ஒன்றி தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி சாதனைப் படைத்தது.
முஸ்லிம்களின் ஓட்டுகள் இல்லாமலேயே அதிமுக அணி உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. இது அப்பாவி முஸ்லிம்களை வைத்து பிழைப்பு நடத்தி வரும் முஸ்லிம் மதவெறி கும்பல்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் 23 முஸ்லிம் மதவெறி அமைப்புகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் சரணாகதி அடைந்துள்ளனர். அவர்களை சமாதானம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர். அவர்கள் இருவரையும் அவசர அவசரமாக சந்தித்து முறையிட்டு மன்றாடி உள்ளனர்.