ஆந்திராவுக்கு 5 துணை முதல்வர்கள்! ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு!!

ஆந்திராவுக்கு 5 துணை முதல்வர்கள்! ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு!!

Update: 2019-06-07 10:54 GMT


ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அப்போது அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். அவர் கூறியதாவது: -


எஸ்சி, எஸ்டி, பிசி, சிறுபான்மையினர், கபு ஆகிய 5 இனத்தவர்களை சேர்ந்த 5 பேர் துணை முதல்வர்களாக நியமிக்கப்படுவார்கள்.  25 அமைச்சர்களும் நியமிக்கப்படுவார்கள்.  30 மாதங்களுக்கு பிறகு ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகளையும் கவனித்து 90 சதவீதம் அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்படுவார்கள். அவர்களுக்கு பதில் புதியவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள். எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்களை உள்ளடக்கியதாக அமைச்சரவை இருக்கும்.


ஒட்டுமொத்த மாநிலமும் அரசை கவனித்து வருவதால் ஒவ்வொரு நடவடிக்கையையும் மிக கவனமாக எடுக்க வேண்டும். அரசு நலத்திட்டங்களில் பல மாற்றங்களை கொண்டு வர நான் முடிவு செய்துள்ளேன். ஊழல் புகார்கள் வராமல் தடுக்க ஒவ்வொரு திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தையும் கண்காணிக்க நீதித்துறை குழு ஒன்றை அமைக்க ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் ஏற்கனவே ஆலோசித்து உள்ளளேன்.


இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்


Similar News