எட்டு மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கி ரீல்ஸ் போடும் தம்பதியர் - இப்படியும் ஒரு கொடுமையா?

மேற்கு வங்காளத்தில் ஒரு தம்பதி ஐபோன் வாங்க எட்டு மாத ஆண் குழந்தையை விற்ற வினோத சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-07-29 06:15 GMT

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்கா நகர் வணிகத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள் குழந்தை இன்றி நடமாடுவது குறித்தும் ஜாலியாக பல இடங்களுக்கு சுற்றித்திரிவது குறித்தும் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் . இதை அடுத்து போலீசார் இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.


போலீஸர் விசாரிப்பது அறிந்த வாலிபர் தலைமறைவு ஆகிவிட்டார். குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. இந்த தம்பதியர் அதில் கிடைத்த பணத்தில் ஐபோன் 14 என்ற நவீன மாதிரி போனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று உல்லாசமாக வாழ்ந்துள்ளனர். அத்துடன் வாங்கிய செல்போனில் வீடியோ காட்சிகளை பதிவு செய்து சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டு மகிழுந்துள்ளனர்.


இதுகுறித்து எங்களுக்கு கடந்த 24- ஆம் தேதி தான் புகார் வந்தது. குழந்தையை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தையை எவ்வளவு பணத்திற்கு விற்றார்கள். யாரிடம் விற்றார்கள் என்பது பற்றிய விவரங்கள் அந்த பெண்ணின் கணவரை பிடித்தால் தான் தெரியும். இது தொடர்பாக அவளது கணவரையும் குழந்தை வாங்கியவர்களையும் தேடி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.


SOURCE :DAILY THANTHI

Similar News