பேஸ்புக் நிறுவனத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்த ஆஸ்திரேலியா: வந்தது ராயல்டி வழங்கும் சட்டம்.!
பேஸ்புக் நிறுவனத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்த ஆஸ்திரேலியா: வந்தது ராயல்டி வழங்கும் சட்டம்.!
ஏற்கனவே மிகப்பெரிய நிறுவனமான கூகிள், நியூஸ் கார்ப் மற்றும் நைன் என்டர்டெயின்மென்ட் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இப்போது பேஸ்புக் நிறுவனமும் செவன் வெஸ்ட் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த வரும் மூன்று ஆண்டு காலத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வரும் செய்திகளை செய்தி நிறுவனத்திடமிருந்து வாங்க சுமார் ரூ.7,230 கோடி செலவிட உள்ளதாகவும் அந்நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த பிரச்சினை எல்லாம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, ஆஸ்திரேலியா அரசாங்கம் ஒரு புது சட்டம் ஒன்றை விதித்துள்ளது. அதன்படி, கூகிள் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு அதன் உரிமை நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த புதிய சட்டத்திற்கு ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இன்று எல்லாம் ஆன்லைன் மயம் தான். சாப்பிடும் உணவு முதல் கால்களுக்குத் தேவைப்படும் காலணி வரை எல்லாவற்றுக்குமே ஆன்லைன் தளங்கள் தான் ஆரம்ப புள்ளியாக உள்ளன. ஆம், ஏதேனும் ஒரு பொருளை வாங்கலாமா? வேண்டாமா? என்றால் அதற்கான பரிந்துரையையும் நாம் சமூக வலைத்தளங்களில் தான் பார்க்கிறோம். ஏன்? இன்னும் சொல்லப்போனால் நாம் வேலைகளை கூட இப்போது ஆன்லைனில் தான் தேடுகிறோம். இதனால் ஆன்லைன் தளங்கள் விளம்பரங்களின் மூலம் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டுகின்றன.