சபரிமலைக்குள் நுழைய முயன்ற சர்ச்சைக்குரிய ரெஹானா பாத்திமாவை பணியிட மாற்றம் செய்தது பி.எஸ்.என்.எல் நிறுவனம் : மேலும் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்ப்பு

சபரிமலைக்குள் நுழைய முயன்ற சர்ச்சைக்குரிய ரெஹானா பாத்திமாவை பணியிட மாற்றம் செய்தது பி.எஸ்.என்.எல் நிறுவனம் : மேலும் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்ப்பு

Update: 2018-10-22 18:36 GMT
கேரள கம்யூனிஸ்ட் அரசின் கமாண்டோ படை போலீஸ் பாதுகாப்புடன் சர்ச்சைக்குரிய பெண் ரெஹானா பாத்திமா சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்றார். இதனை தொடர்ந்து, கேரள ஜமாஅத் சபை அந்த பெண்ணை இஸ்லாமிய மதத்தில் இருந்து நீக்கியது. இதனை தொடர்ந்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணி புரியும் அவரை, இடமாற்றம் செய்துள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். கொச்சி போட் ஜெட்டி கிளையிலுருந்து ரவிபுரம் கிளைக்கு ரெஹானா பாத்திமா மாற்றப்பட்டுள்ளதாக மாத்ருபூமி செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும், முறையான விசாரணை நடத்தப்பட்டு, அந்த பெண்ணின் மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரெஹானா பாத்திமவின் முகநூல் பதிவுகள் பற்றிய விளக்கம் கேட்டு சைபர் செல்லுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News