கொரோனா அச்சத்தினால் ஷாருக்கான் இருக்கும் சொகுசு பங்களாவிற்கு பிளாஸ்டிக் கவர் போட்டு மூடப்பட்டிருக்கிறது!!!

கொரோனா அச்சத்தினால் ஷாருக்கான் இருக்கும் சொகுசு பங்களாவிற்கு பிளாஸ்டிக் கவர் போட்டு மூடப்பட்டிருக்கிறது!!!

Update: 2020-07-20 14:29 GMT

கொரோனா தாக்கத்தினால் ஷாருக்கான் சொகுசு பங்களா முழுவதும் பிளாஸ்டிக் கவர் போடப்பட்டிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர் குடும்பத்தினருக்கும்கொரோனா தோற்று டெஸ்ட் எடுக்கப்பட்டது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராத்யா ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற செய்தி முதலில் வெளியானது.

பின்னர் சில மணி நேரத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவருக்கும் எடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து தாய் - மகள் இருவரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு ஷாருக் கான் குடும்பத்தினருடன் வசிக்கும் சொகுசு பங்களா, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News