இந்திய அணியில் என்னுடைய எதிர்காலத்தை பற்றிய தெளிவை கொடுத்தவர் எம்.எஸ் டோனி - முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்.!

இந்திய அணியில் என்னுடைய எதிர்காலத்தை பற்றிய தெளிவை கொடுத்தவர் எம்.எஸ் டோனி - முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்.!

Update: 2020-08-04 11:06 GMT

இந்திய அணியின் முன்னாள் சிறப்பான ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். இவர் இந்திய அணிக்காக 2003, 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் விளையாடி உள்ளார்.

இந்திய அணியில் என்னுடைய எதிர்காலத்தைப் பற்றிய தெளிவை கொடுத்தவர் எம்எஸ் டோனி என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

நான் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பிய போது எனக்கு மிகவும் ஆதரவு அளித்தவர் வீராட்கோலி. அதை அவர் செய்யாமல் இருந்திருந்தால் என்னால் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடி இருக்க முடியாது. இதன் பின்பு 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் தேர்வு குழு என்னை பரிசீலிக்க இல்லை என்ற செய்தியை எம்.எஸ் டோனி தான் என்னிடம் தெரிவித்தார்.


இதனிடையே 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை எம்.எஸ் டோனிக்கு என் மீது தீவிர நம்பிக்கை இருந்தது. நான் அவருடைய அணியில் முக்கியமான வீரர் என என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்.

மேலும், நான் நோய்வாய்பட்டு குணமாகி அணிக்கு மீண்டும் வரும் பொழுது பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. 2015ஆம் உலகக்கோப்பையில் என்னை பரிசீலினை செய்யாதது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.   

Similar News