அயோத்தியில் ராமர் கோவில்: கண்களைக் கவரும் மின் விளக்குகள்; ஜொலிக்கும் அயோத்தி சரயு நதிக்கரை.!
அயோத்தியில் ராமர் கோவில்: கண்களைக் கவரும் மின் விளக்குகள்; ஜொலிக்கும் அயோத்தி சரயு நதிக்கரை.!
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது இந்த விழாவில் பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
இதனால் அயோத்தி நகரம் முழுவதும் இருக்கும் மக்கள் அனைவரும் பெரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அயோத்தியில் இருக்கும் சரயு நதிக்கரையில் கண்களை கவரும் வண்ணத்தில் மின்விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
மேலும், பூமி பூஜை பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. 12.40 மணிக்கு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார். பின்பு 2 மணி நேரம் வரை பூஜைகள் நடைபெற உள்ளது. மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார்.