டீ விற்று அனைவருக்கும் உதவிய பையனுக்கு ராகவா லாரன்ஸ் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கிறாராம்.!

டீ விற்று அனைவருக்கும் உதவிய பையனுக்கு ராகவா லாரன்ஸ் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கிறாராம்.!

Update: 2020-08-04 10:11 GMT

சமீபத்தில் ஒரு சிறுவன் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பரவி வருகிறது அந்த வீடியோவை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார்.

அப்படியே அந்த பதிவில் "இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்" என்று தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சிறுவன் பேசியிருப்பது அனைவரிடம் மனதிலும் ஆழமாக பதிந்து இருக்கிறது.

அந்தப் பையனின் பேச்சை கண்டு ஆச்சரியப்பட்ட நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த பையனுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க இருப்பதாக கூறினார். அந்த பையன் பிச்சைக்காரனாக மதுரையில் சுற்றிவந்த இளைஞன் பிச்சை எடுத்த காசை வைத்து டீ வியாபாரம் செய்து வந்தார். மேலும் அந்த லாப பணத்தை ஆதரவற்றோருக்கு உணவு வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைப் பார்த்த ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும்பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும் என்றும் இவருக்கு என்னால் முடிந்த உதவியாக ஒரு லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

Similar News