உலக அளவில் பரவி இருக்கும் கொரோனாவை அழிக்க முடியாது - தொற்று நிபுணர் அந்தோணி பவுசி.!
உலக அளவில் பரவி இருக்கும் கொரோனாவை அழிக்க முடியாது - தொற்று நிபுணர் அந்தோணி பவுசி.!
உலக முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் அழிக்க முடியாது என அமெரிக்காவின் முன்னணி தொற்று நிபுணர் மருத்துவர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார்.
இதை பற்றி நிபுணர் அந்தோணி பவுசி கூறியது: கொரோனா வைரஸை அழிக்க உலக நாடுகளால் முடியாது. தடுப்பூசி மருந்து கொரோனா தொற்றறை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும். கொரோனாவை இந்த லோகத்தில் இருந்து அழிக்க முடியாது. ஏனென்றால் இது வேகமாக பரவக்கூடிய கொடிய வைரஸ், அதனால் அழிப்பதற்கு வாய்ப்பு இல்லை என தோன்றுகிறது.
ஆனால், ஒரு துல்லியமான தடுப்பூசி மற்றும் சிறப்பான சுகாதார நடவடிக்கையால் நாம் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என நினைக்கிறேன். 2021 ஆம் ஆண்டு கொரோனா கட்டுக்குள் வரும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.