புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வெளி மாநிலத்தவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய தமிழக அமைச்சர்!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வெளி மாநிலத்தவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய தமிழக அமைச்சர்!
ஊரடங்கு உத்தரவு காரணமாக புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதியான பட்டானூரில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு பொருட்களை தமிழக சட்டதுறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அந்த அந்த மாநிலங்களிலேயே தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பணிக்கு வந்தவர்கள் இந்த ஊரடங்கு உத்தரவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக வானூர் தொகுதிக்குட்பட்ட பட்டானூர் பகுதியில் வெளிமாநிலத்திலிருந்து பணிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தேவையான உணவு பொருட்களை தமிழக சட்டதுறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர்களிடம் உறுதியளித்தார். அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுறை, சட்டமன்ற உறுப்பினர் சங்கரபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.