கொரோனா நிவாரணம் - தனி ரூட்டில் விஜய்! அஜீத் திட்டம் என்ன?

கொரோனா நிவாரணம் - தனி ரூட்டில் விஜய்! அஜீத் திட்டம் என்ன?

Update: 2020-04-07 05:58 GMT

அஜீத் விஜய் இருவருமே தங்கள் துறையை சார்ந்த ஃபெப்சிக்கு கூட கொரோனா நிவாரணமாக எந்த உதவியும் செய்யவில்லை என்றும், இதனால் அவர்களது ரசிகர்களே வருத்தத்தில் இருப்பதை பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். அதன் தொடர்ச்சியாக ஃபெப்சி அமைப்பை சேர்ந்தவர்கள் நேரடியாக அஜீத் விஜயிடமே உதவி கோரலாம் என எண்ணி அவர்களை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.

அஜீத்தின் தந்தை உடல்நிலை குன்றியுள்ள நிலையில் உள்ளதால் அவர் மீது கவனம் செலுத்தி அவருடன் அஜீத் இருப்பதாகவும், கேட்காமலேயே மக்களுக்கு பல உதவிகள் செய்யும் அஜீத் நிச்சயம் கொரோனா நிவாரணத்திற்க்கும் விரைவில் உதவுவார் என்ற தகவல் கூறப்பாட்டதாம்.

விஜயோ வேறு ஒரு திட்டத்தில் இருக்கிறாராம். தனக்கும் தன் படங்களுக்கும் தொடர்ந்து அரசு இடைஞ்சல் கொடுத்து வருவதால் ஊரடங்கு தளர்ந்திய பிறகு தன்னுடைய ரசிகர் மன்றங்கள் மூலம் நேரடியாக மக்களை சென்றடையும் வகையில் உதவ திட்டமிட்டுள்ளாராம். இதற்கு சுமார் 25 கோடி அவரை அவர் ஒதுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் பெரிய ரசிகர் வட்டம் வைத்திருக்கும் விஜய், அங்கு பெரு வெள்ளம் ஏற்பட்ட போது இதே பாணியில் தான் அந்த மக்களுக்கும் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News