ஆலங்குடி குரு பகவான் கோவிலில் நடிகர் சமுத்திரகனி சாமி தரிசனம்
நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குருபகவான் கோவிலில் நடிகர் சமுத்திரகனி சாமி தரிசனம் செய்தார்.
நீடாமங்கலம் அருகே நவகிரக ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் வியாழக்கிழமை குரு வார வழிபாட்டை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபர் சகாயேஸ்வரர், ஏலவார்க் குழலி அம்மன் , மூலவர் குரு பகவான், ஆக்ஞா கணபதி , வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் , நவகிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சந்ததிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது .
இதில் மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு இருந்தது. உற்சவர் குரு பகவானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது .அப்போது இந்த குரு வார வழிபாட்டில் திரைப்பட நடிகர் சமுத்திரகனி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் .இதே போல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையை முன்னிட்டு குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.