CAA எதிர்ப்பு போராட்டத்துக்கு ஐந்து கோடி ரூபாய் வாங்கி விட்டு JNU சென்றாரா தீபிகா படுகோனே? - திடுக்கிடும் தகவல்கள்.!
பாலிவுட் யாரும் நினைத்ததை விட அழுகிப் போயிருக்கிறது.
இந்த வருடம் ஜனவரியில், மத்திய அரசு கொண்டு வந்த CAA சட்டத்திற்கு எதிராக டெல்லியில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில், JNU பல்கலைக்கழகம், ஜாமியா இஸ்லாமியா, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களும், வன்முறைகளும் அடக்கம். அப்போது, JNU மாணவர்களில் இரு பிரிவினரிடையே சண்டை மூண்டது. அங்கு இடதுசாரி மாணவர்களை மட்டும் சந்திக்க சென்றார் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. அவருடைய ஒரு திரைப்படம் மறுநாள் காலை வெளியாகவிருந்தது உபரி செய்தி. அதன் விளம்பரத்திற்காக அங்கு தீபிகா சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. ஊடக நிறுவனமான BBC வெளியிட்ட தீபிகாவின் வருகையின் படங்களை, PR ஏஜென்சி 'ஸ்பைஸ்' வழங்கியதாக பின்னர் கண்டறியப்பட்டது. இப்போது 5 கோடி ரூபாய் பணம் வாங்கிவிட்டு தான் அங்கு சென்றார் என்று புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
தீபிகா படுகோனே, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாகிஸ்தான் வம்சாவளித் தொழிலதிபர் அனீல் முசாரத்திடம் இருந்து JNUவிற்கு வருகை தந்ததற்காக ரூ 5 கோடியைப் பெற்றாரா என்பது குறித்து ED (அமலாக்க இயக்குநரகம்) விசாரித்து வருவதாக முன்னாள் புலனாய்வு அதிகாரி N.K சூட் திடுக்கிட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
திரு. சூட் தனது யூடியூப் சேனலான 'ISRG - இந்தியன் செக்யூரிட்டி ரிசர்ச் குரூப்' இல் உளவுத்துறை, வெளிநாட்டு விவகாரங்கள், புவிசார் அரசியல், உள்நாட்டு அரசியல் மற்றும் பிரேக்கிங் இந்தியாகும்பலுடனான பாலிவுட் தொடர்புகள் போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பான தகவல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த சேனல் வெறும் 7 மாதங்களில் 139K பின்தொடர்பவர்களைக் குவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் என்.கே. சூட் முதன்முதலில் அனீல் முசாரத் பற்றி பேசியிருந்தார், அங்கு அவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து தொழிலதிபரான முசாரத்தின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனான நெருங்கிய தொடர்புகளையும், பல பாலிவுட் ஜாம்பாவான்களுடனான நட்பையும் வெளிப்படுத்தினார். முசாரத், இம்ரான் கானின் PTI கட்சிக்கு முக்கிய நிதி திரட்டல் மற்றும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுடன் காணப்பட்டார். ரோஹிங்கியா அகதிகள் நிவாரணப் பணிகள் போன்ற முஸ்லீம் காரணங்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.