தனது தலையை மறைத்து கொள்ளாததால் 4 வயது மகளை கொலை செய்த தந்தை

தனது தலையை மறைத்து கொள்ளாததால் 4 வயது மகளை கொலை செய்த தந்தை

Update: 2019-04-28 18:06 GMT

உத்தர பிரதேச மாநிலம், பரேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் உணவு உண்ணும் போது தனது தலையை மறைத்துக் கொள்ளாததால், நான்கு வயது சிறுமியை, அவரது தந்தை கொலை செய்துள்ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது . வெள்ளிக்கிழமை மதியம், ஃபெரின் என்ற சிறுமி தனது தாயுடன் அமர்ந்து உணவு உட்கொண்ட போது இந்த கொடூரம் நடந்ததாக கூறப்படுகிறது.


சிறுமியின் தாய் புகார் அளித்துள்ள எஃப்.ஐ.ஆர்-இல், குடும்பத்தில் உள்ள அனைவரின் முன்பும் இந்த கொடூரம் நடந்தது என்றும், சிறுமியின் தாய் தடுத்து நிறுத்த முயன்ற போது அவரையும் தாக்கினார் என்று கூறப்படுகிறது. சிறுமி இறந்த பிறகு அவரது வீட்டிற்குள்ளேயே அவளை அடக்கம் செய்வதற்காக தன் மனைவியைக் கேட்டுள்ளார் கொலை செய்த தந்தை. ஆனால் சிறுமியின் தாய் அதற்கு மறுத்துவிட்டார்.


"மகளை கொலை செய்ததற்காக தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த சம்பவத்தை பற்றி நாங்கள் விசாரணை நடத்தி வருகின்றோம்," என காவல்துறை கண்காணிப்பாளர் பி.கே. ஸ்ரீவஸ்தவ் கூறியதாக அந்த செய்தி குறிப்பு கூறுகிறது.


Similar News