மசூதி குழாயிலிருந்து தண்ணீர் எடுத்ததற்காக துன்புறுத்தப்பட்ட இந்து குடும்பத்தினர் ! - அடைத்து வைத்து பிணைக்கைதிகளாக்கப்பட்ட சோகம் !

Hindu Family Tortured, Held Hostage For Taking Water From Mosque Tap

Update: 2021-09-21 07:27 GMT

Persecuted Hindu minorities in Pakistan - representative image. (Twitter)

பாகிஸ்தானின் ரஹிம் யார் கான் நகரில் வசித்து வரும் ஒரு இந்து குடும்பத்தைச் சேர்ந்த பண்ணை தொழிலாளர்கள், மசூதி குழாயிலிருந்து தண்ணீர் எடுத்ததற்காக துன்புறுத்தப்பட்டுள்ளனர். 

அந்த இடத்தின் புனிதத்தை மீறியதாக கூறி, சில கிராம நிலப்பிரபுக்கள் அவர்களை சித்திரவதை செய்து பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர் என்று டான் செய்தி ஊடகம் தெரிவிக்கிறது.

சம்பவத்தின் பின்னணி: 

புறநகரில் உள்ள பஸ்தி கஹூர் கானில் வசிப்பவர் ஆலம் ராம் பீல், அவரது மனைவி உட்பட மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு வயலில் பச்சைப் பயிரை அறுவடை செய்யும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

குடும்பம் அருகிலுள்ள மசூதிக்கு வெளியே குழாயிலிருந்து குடிநீர் எடுக்கச் சென்றபோது, ​​சில உள்ளூர் நிலப்பிரபுக்களும் அவர்களது ஆட்களும் அவர்களை அடித்துள்ளனர். பறித்த பயிர்களை இறக்கிவிட்டு குடும்பம் வீடு திரும்பும் போது, ​​நில உரிமையாளர்கள் அவர்களை  பிணைக்கைதிகளாக பிடித்து மீண்டும் சித்திரவதை செய்ததாக டான் செய்தி அறிக்கை கூறுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆளும் பிடிஐ கட்சியை  உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்புடையவர்கள் என்பதால் விமான நிலைய காவல் நிலையம் வழக்கு பதிவு செய்யவில்லை என்று ராம் பீல் கூறினார்.

ராம் தான் காவல் நிலையத்திற்கு வெளியே உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாக காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிடிஐ கட்சியின் தெற்கு பஞ்சாப் சிறுபான்மை பிரிவு பொதுச்செயலாளர் யோதிஸ்டர் சோஹனுக்கு இந்த சம்பவம். ஆனால் ஆளும் கட்சி எம்பியின் செல்வாக்கு காரணமாக அவரும் கண்டுகொள்ளவில்லை.  மாவட்ட காவல்துறை அதிகாரி அசாத் சர்ப்ராஸ் இது குறித்து விசாரித்து வருவதாக கூறினார்.

Tags:    

Similar News