இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது: அமெரிக்க எம்.பி புகழாரம்!

இந்தியாவின் எதிர்காலம் முன்பு விட தற்பொழுது அதிக பிரகாசமாக இருப்பதாக அமெரிக்க எம்.பி புகழாரம் சூட்டி இருக்கிறார்.

Update: 2022-11-22 06:28 GMT

இந்தியாவின் எதிர்காலம் உண்மை விட பிரகாசமாக மற்றும் புதிய பொலிவுடன் இருப்பதாக அமெரிக்கா எம்.பி ஜான் கார்ட்டர் என்பவர் கூறி இருக்கிறார். மேலும் இதுகுறித்து அவர் அமெரிக்காவில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசுகையில்,இந்தியா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் ஆட்சி செய்து வந்தது. ஆனால் தற்போது விடுதலை அடைந்த இந்தியா 75 ஆவது ஆண்டில் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் மற்றும் சுயராஜ்யத்திற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு கடந்த சகாப்தங்களில் அசைக்க முடியாதது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.


ஆனால் இந்தியாவின் எதிர்காலம் தற்பொழுது மும்பை விட அதிக பிரகாசமாக உள்ளது. 100 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட வலிமையான தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு தேசிய ஜனநாயகத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டுகிறது. பிரதமர் மோடி அவர்களின் முயற்சியினால் இந்தியா அதிகப்பிரகாசமாக திகழ்கிறது.


கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவுடன் அமெரிக்காவின் நட்புறவு செழித்து வளர்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறுகிறார். மேலும் இந்திய மக்களை தனது நண்பர்களாக ஏற்றுக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் சுயாட்சி சுதந்திரம் மற்றும் வெளிநாட்டு ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் இருவரும் அங்கீகரிப்பவர்களாக உள்ளோம் என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News