உலக பயங்கரவாதத்தின் நாற்றங்காலாக திகழும் தப்லீக் ஜமாத் அமைப்பின் செயலை ஆதரிப்பது பொறுப்பற்ற தனம்! பிரபல தமிழ் நாளேடு சீற்றம்..
உலக பயங்கரவாதத்தின் நாற்றங்காலாக திகழும் தப்லீக் ஜமாத் அமைப்பின் செயலை ஆதரிப்பது பொறுப்பற்ற தனம்! பிரபல தமிழ் நாளேடு சீற்றம்..
இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிரான மாபெரும் சுகாதார காப்பு போராட்டத்தை முன்னெடுத்து மாநாடுகள், கூட்டங்கள், சமய நிகழ்ச்சிகள் அனைத்தையும் தடை செய்த மறுநாளே இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 9000 பேரை திரட்டிய தப்லீக் ஜமாத் அமைப்பு தொடர்ந்து மாநாட்டை நடத்தியது மாபெரும் குற்றம் என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்காத டெல்லி அரசின் செயலும் மன்னிக்க முடியாதது என்றும் தினமணி நாளிதழ் சமீபத்தில் வெளியிட்ட தனது தலையங்கத்தில் பொரிந்து தள்ளியுள்ளது.
அந்த இதழ் ஆசிரியரும், தமிழ் பத்திரிகை உலகின் மூத்த ஜாம்பவானுமான கே. வைத்யநாதன் அவர்கள் தனது தலையங்க பக்கத்தில் கூறியுள்ளதாவது:
உலகம் தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் போராடிக் கொண்டிருக்கும்போது, கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு கூட்டப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது. தவறு செய்தது போதாது என்று தாங்கள் செய்த தவறை அவர்களில் பலர் நியாயப்படுத்த முயல்வதும், அந்த அமைப்பினருக்குச் சிலர் ஆதரவுக் குரல் கொடுப்பதும், இதை மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று கூறி அடக்கி வாசிக்க முயல்வதும், ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம்.
தில்லி நிஜாமுதீனில் செயல்படும் தப்லீக் ஜமாத்தின் தலைமையகம், அலமி மர்கஸ் பங்களேவாலி மசூதியில் அமைந்திருக்கிறது. இப்போது வெளிவரும் செய்திகளிலிருந்து, மதத் தீவிரவாதத்தின் நாற்றங்காலாக இந்த அமைப்பு செயல்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15-ஆம் தேதிவரை தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான பங்களேவாலி மசூதியில் நடந்த மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் ஏனைய இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.