தமிழ் சங்கமம் நிகழ்ச்சியால் காசியின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது - விஸ்வநாதர் கோவில் நிர்வாகி தகவல்!
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியால் இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவு வலுப்பெற்று உள்ளதுடன் காசிம் பொருளாதார உயர்ந்துள்ளதாகவும் காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையிலும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையிலும் மத்திய அரசு சார்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி கடந்த 17ஆம் தேதி தொடங்கி வருகிற 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து ஏழு சிறப்புகள் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் காசிக்கு வரவழைத்து காசி, சாரநாத், அயோத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காண்பிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் கடந்த 19ஆம் தேதி கோவையில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் ஆனது சேலம் சென்னை வழியாக நேற்று முன்தினம் வாரணாசி வந்தடைந்தது. இந்த சிறப்பு ரயிலில் தொழில் வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் காசிக்கு வந்தடைந்தனர். அவர்களுக்கு காசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் காசி விஸ்வநாதர் கோவில் , காசி விசாலாட்சி கோவில், காசி அன்னபூரணி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அன்று மாலை சாரநாத் அழைத்துச் செல்லப்பட்டு புத்தர் முதல் ஞானோபதேசம் அடைந்த இடம் சுற்றி காண்பிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் வாரணாசி வந்து தங்கியவர்கள் நேற்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் வங்கியில் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர் . அதைத் தொடர்ந்து கால பைரவர் கோவில் மற்றும் பாரதியார் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து பனாரஸில் உள்ள நமோ படித்துறையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.