பாஜக வெற்றிப் பேரணியில் மம்தாவின் குண்டர்கள் குண்டு வீச்சு! காட்டாச்சிக்கு மக்கள் சாவுமணி அடித்ததால் ஆத்திரம்!!

பாஜக வெற்றிப் பேரணியில் மம்தாவின் குண்டர்கள் குண்டு வீச்சு! காட்டாச்சிக்கு மக்கள் சாவுமணி அடித்ததால் ஆத்திரம்!!

Update: 2019-05-28 07:30 GMT


மேற்கு வங்காள மாநிலத்தில் 2014-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. ஆனால் தற்போது நடந்த தேர்தலில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றது. இது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது. இதன் மூலம் மம்தாவின் காட்டாச்சிக்கு மக்கள் சாவுமணி அடித்துள்ளனர். மேலும் 2 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மம்தாவை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மம்தா, மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் தனது குண்டர்கள் மூலம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார். பல பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் அங்குள்ள பிர்பும் மாவட்டம் மயூரேஸ்வர் என்ற இடத்தில் பாஜக சார்பில் வெற்றிப் பேரணி நடைபெற்றது. இந்த பெரணியில் சென்றவர்கள் மீது மம்தாவின் குண்டர்கள் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் இந்த வெறிச்செயலுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


Similar News