குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Update: 2018-11-10 19:23 GMT
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-மொராக்கோ இடையே குற்றவாளிகளை நாடுகடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தமானது, இம்மாதம் 11 முதல் 18-ம் தேதிவரை, மொராக்கோ-விலிருந்து இந்தியாவுக்கு முக்கிய பிரமுகர்கள் மேற்கொள்ளும் பயணத்தின்போது கையெழுத்தாக உள்ளது.
பலன்கள்:
பொருளாதார குற்றங்கள், தீவிரவாதம் மற்றும் பிற தீவிர குற்றங்களை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை ஒரு நாட்டிலிருந்து, மற்றொரு நாட்டுக்கு நாடு கடத்துவதற்கு வலுவான சட்ட வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் வழங்க உள்ளது. இந்தியாவிலும், மொராக்கோ-விலும் தேசிய நலனுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை எதிர்கொள்ளும் வகையில், இருதரப்பு நல்லுறவை இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தும் .
Source : PIB

Similar News